ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கிரேக்கத் தீவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து: 4 பேர் பலி!

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவான லெரோஸ் பகுதியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றாக படகு கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரு பெண் உயிரிழந்தனர். 

News image
Updated On :6 பிப்ரவரி 2023, 6:13 am

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவான லெரோஸ் பகுதியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றாக படகு கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரு பெண் உயிரிழந்தனர். 

பெண்ணின் உடல் கடலில் சேகரிக்கப்பட்டதாக ஹெலனிக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்தனர். 

சமீபத்திய கணக்கின்படி மொத்தம் 39 பேர் மீட்கப்பட்டனர். மேலும் பலர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துருக்கி கடற்கரையில் இருந்து புறப்பட்ட டிங்கி படகில் சுமார் 40 பேர் இருந்ததாகவும், அதில் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் இருந்ததாகவும், படகிலிருந்து தப்பியவர்கள் ஹெலனிக் கடலோர காவல்படை அறிக்கை தெரிவித்துள்ளது. 

படிக்க:துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலி
 
கனமழை, பலத்த காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலையுடன், மோசமான வானிலைக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 

கடந்த 2015 முதல் ஏஜியன் கடலில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.