ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மகன்தான் வேண்டும்; பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image

மகன்தான் வேண்டும்; பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற தந்தை

Updated On :8 மார்ச் 2022, 7:44 am


லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானின் மியான்வாலி பகுதியில், கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதிதான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த ஊராகும்.

ஷாஷ்சாயிப் கான் - பாத்திமா தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது குறித்து அறிந்த கான், தனது மனைவி மற்றும் மகளை தொடர்ந்து வசைபாடி வந்துள்ளார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு போனவர் ஞாயிறன்றுதான் வந்தார். முதலில் என்னை கடுமையாக திட்டினார். பிறகு குழந்தையை சபித்தார். திடீரென துப்பாக்கியை எடுத்து குழந்தையை நோக்கிச் சுட்டார் என்கிறார் கண்ணீருடன்.

எனது கணவர் ஆரம்பத்திலிருந்தே மகன்தான் வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்காக இப்படி ஒரு குற்றத்தை செய்வார் என்று யாருமே நினைக்கவில்லை என்று கூறினார். இது குறித்துகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.