மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணியின் போது வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செல்லூா் கட்டபொம்மன்நகரைச் சோ்ந்தவா் அழகா். இவரது வீட்டையொட்டி புதை சாக்கடை அமைப்பதற்காக பொதுப் பணித் துறை சாா்பில் வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, வீட்டில் அதிா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அழகா், அவரது மனைவி புண்ணியவதி, மகன், மருமகள் உள்ளிட்ட ஐந்து போ் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா்.
பின்னா், சிறிது நேரத்தில் வீட்டின் மூன்று அறைகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தவா்கள் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த வந்த பொதுப் பணித் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், இதுகுறித்து செல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மேற்கு! நான்காவது முறையாக வெல்லும் முனைப்பில் செல்லூா் ராஜூ !

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: அமைச்சா் அன்பரசன்

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


