தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

காபூல் விமான நிலையத்தில் இதுவரை 40 பேர் பலி: தலிபான்

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் மற்றும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் வரை பலியாகியுள்ளதாக தலிபான் கமெண்டர் மொஹிபுல்லா ஹெகமத் தெரிவித்துள்ளார்.

News image
காபூல் விமான நிலையத்தில் கூட்டத்தில் சிக்கி 40 பேர் பலி
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

IANS

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் மற்றும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் வரை பலியாகியுள்ளதாக தலிபான் தளபதி மொஹிபுல்லா ஹெகமத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களைத் திரும்ப அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை முதல் ஆப்கன் மக்களும் பிற நாட்டு மக்களும் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். விமானத்தில் இடம் கிடைக்காமல் இறக்கைகளில் தொற்றிக் கொண்டு சென்ற பலர் கீழே விழுந்து பலியாகினர். கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து விமான நிலையம் வெளியே உள்ள தலிபான் கமெண்டர் மொஹிபுல்லா ஹெகமத் கூறியதாவது,

திங்கள்கிழமை முதல் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெளிநாட்டு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 40 பேர் வரை பலியாகியுள்ளனர். வெளிநாடு செல்வதற்காக யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம். அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

ஆப்கானிஸ்தானில் நிலவிய அமைதியும் முன்னேற்றமும் மீண்டும் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தலிபான்கள் எடுத்து வருவதாக கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.