பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ‘திடீர் ’உத்தரவு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்

Updated On :23 ஜூன் 2020, 11:07 am

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்கின் பரிந்துரையின்படி அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து செவ்வாயன்று அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்காரணமாக விரைவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான தேதி ஜூன் 30-ஆக இருக்கலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ‘தி ஸ்ட்ரைட் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.    

முன்னதாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ ஸீன் லூங் கூறியதாவது:

சிங்கப்பூரில் கரோனா வைரசின் தாக்கத்தினால் ஏற்பட்ட சூழல் தற்போது கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்தலை நடத்தி விடலாம் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய அரசுக்கு ஆட்சி செய்வதற்கு முழுதாக ஐந்து ஆண்டுகள் கிடைக்கும்.

புதிதாகத் தேர்வு செய்யபப்டும் அரசானது கரோனா பாதிப்பைக் கையாளுதல்,  நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேசிய செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதுதொடர்பாக முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும்.

வரும் அரசானது  வெறுமனே அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையுடன் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.