பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றம்: விமானங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

இந்தோனேசியாவில் மெராபி எரிமலைச் சீறத் துவங்கியிருப்பதால், அப்பகுதியில் பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

மெராபி எரிமலை

Updated On :21 ஜூன் 2020, 10:48 am

ஜகார்த்தா:  இந்தோனேசியாவில் மெராபி எரிமலைச் சீறத் துவங்கியிருப்பதால், அப்பகுதியில் பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தோனேசியாவின் தேசிய எரிமலை ஆராய்ச்சி நிலையச் செய்திகளை மேற்கோள் காட்டி, சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 2,930 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த எரிமலையானது ஞாயிறன்று எரிமலைக் குழம்புகளை வெளியேற்றி சீறத் துவங்கியுள்ளது. அதிலிருந்து வெளியான சாம்பல் புகை மண்டலமானது வானத்தில் 6 கிலோமீட்டர் உயரத்திற்கு பரவியுள்ளது. இதையடுத்து  அருகே வாழும் மக்கள் அது அமைந்துள்ள இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழையக் கூடாதென்று தடை விதிகபட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் விமானங்கள் எதுவும் பறக்க கூடாதென்று சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பும்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எரிமலையானது கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி எரிமலைக்குழம்பை சீறி வெளித்தள்ளியபோது, சுமார் 3 கிலோமீட்டர் உயரத்திற்கு வானத்தில் சாம்பல் புகை பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.