இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

நேபாளத்தில் டிப்பர் லாரி ஆற்றுக்குள் பாய்ந்து 30 பேர் மாயம்

இந்தியாவிலிருந்து திரும்பியவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று புதன் காலை ஆற்றுக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில், 30 பேரைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
லாரி ஆற்றினுள் பாய்ந்து விபத்து
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

IANS

காத்மாண்டு: இந்தியாவிலிருந்து திரும்பியவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று புதன் காலை ஆற்றுக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில், 30 பேரைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பிய 50 நேபாள நாட்டினரை ஏற்றிக் கொண்டு, புதன்கிழமை காலை டிப்பர் லாரி ஒன்று காலிகொட் மாவட்டத்தில் உள்ள ரஸ்கொட் நகராட்சிக்கு தனிமைப்படுத்துதல் முகாமிற்கு பயணமாகிக் கொண்டிருந்தது.

அந்த லாரியானது கர்னலி நெடுஞ்சாலையில் லலிகாட் என்னும் இடத்திற்கு அருகில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கர்னலி ஆற்றினுள் பாய்ந்தது.

சம்பவம் குறித்த தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கியவர்களில் சுமார் 20 பேரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்துள்ளது. மீதமுள்ளோரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிக அளவிலான ஆட்களை லாரியில் ஏற்றியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.