தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நியூ யார்க்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாய் மரணம்

நியூ யார்க்கில் கரோன தொற்று உறுதி செய்யப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் மரணம் அடைந்தது.

News image
நியூ யார்க்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாய் மரணம்
Updated On :27 ஜனவரி 2024, 5:02 pm

ENS


நியூ யார்க்: நியூ யார்க்கில் கரோன தொற்று உறுதி செய்யப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் மரணம் அடைந்தது.

ஸ்டேடன் தீவுப் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிஸான் தேசிய ஜியாக்ரஃபிகலுக்கு அளித்த பேட்டியில், தங்களது 7 வயது ஷெப்பர்ட் வகை நாய்க்கு ஏப்ரல் மாதம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதன் பிறகு ராபர்ட் கரோனா பாதித்து பல வாரங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான், மே மாதத்தில் கால்நடை மருத்துவர் நாயை பரிசோதித்து அதற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

அமெரிக்காவின் வேளாண்துறை கடந்த ஜூன் மாதம், நியூ யார்க்கில் நாய் ஒன்றுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தெரிவித்திருந்தது. ஆனால், அதன் உரிமையாளர்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டது முதலே மெல்ல அது மோசமடைந்து வந்தது. மூக்கில் இருந்து கெட்டியான சளி கொட்டியது. ஜூலை மாதத்தில் அது ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தது என்று அலிஸான் கூறியுள்ளார்.

நாயின் மரணத்தில் கரோனாவின் பங்கு இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ரத்தப் பரிசோதனையில் அது ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், மனிதர்களிடம் இருந்துதான் விலங்குகளுக்கு கரோனா தொற்று பரவியதும், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவியதற்கான சான்றுகள் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.