சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை அரசு தடை
இலங்கையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு..


இலங்கையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கும் முறைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது இலங்கை அரசு.
இன்று காலை நிலவரப்படி கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் கடந்த ஜனவரி 19ம் தேதி சீனாவிலிருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று இலங்கை மருத்துவத்துறையின் தொற்றுநோய் பிரிவு தலைவர் சுதாத் சுராவீரா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் முறையை ரத்து செய்து இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இலங்கையில் புதிய கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...