ஈரான் துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தெஹ்ரான்: சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான் துணை அதிபரும், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருபவருமான மௌசூமே எப்தேகாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டு சுகாதாரத் துறை இணையமைச்சரும், கரோனா வைரஸுக்கு எதிரான திட்ட அமைப்பின் தலைவருமான இராஜ் ஹரீா்சியைத் தாக்கிய நிலையில், தற்போது துணை அதிபருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமைச்சர் பதவியேற்ற முதல் முஸ்லிம் பெண் ஏப்டேகர் ஆவார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானில் கரோனா வைரஸ் பாதித்த 26 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 245 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஈரானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் தங்களது எல்லைகளை மூடிவிட்டன. விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...