இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கரோனா வைரஸுக்கு இத்தாலியில் முதல் பலி 

கரோனா வைரஸ் இத்தாலியில் பரவி வருவதையடுத்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:56 pm

ANI

ரோம்: கரோனா வைரஸ் இத்தாலியில் பரவி வருவதையடுத்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் இதுவரை 2360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று, பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இத்தாலியில் வடக்கு மாகாணமான படுவா பகுதியில் 78 வயதுள்ள முதியவர் ஒருவர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார். 

இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவ துவங்கியுள்ளது. இத்தாலியில் 14 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இத்தாலியில் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.