கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி எலீன் நோட்டன் அந்நிறுவனத்தின் ஊழியர்களின் போக்கால் இந்த ஆண்டு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.
இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், "எலீன் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் கூகுளில் அவரது அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம்". என்றார்.
நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராக பேசிய பணியாளர்களை வேலையிலிருந்து தூக்கியதாகக் கூறப்படும் கூகுள், அப்பிரச்னையால் கடந்த ஆண்டில் நிறைய விமரிசனங்களை எதிர்கொண்டது.
பொருத்தமற்ற பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் பல மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. அதற்குப் பிறகு கூகுள் ஊழியர்களிடையே எதிர்வினைகளும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் சுமார் 20,000 ஊழியர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கூகுள் பணியிடச் சிக்கல்களைப் பற்றி புகார் அளித்தவர்களுக்கு பணி நீக்கத்தை பதிலடியாகக் கொடுத்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
எவ்வாறாயினும், நோட்டன் மனிதவளத் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது என்று கூகுள் கூறியது.

"கடந்த 13 ஆண்டுகளில், எலீன் நிறுவனத்திற்கு ஊடகப் பங்களித்ததிலிருந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் விற்பனை மற்றும் செயல்பாடுகளை வழிநடத்துவதற்கும், குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் எங்கள் வளர்ச்சியின் பங்கெடுத்து, பணியாளர்கள் செயல்பாட்டுக் குழுவை வழிநடத்துவதற்கும் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். கூகுளில் 70,000-க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர், "என்று சுந்தர் பிச்சை மேலும் கூறினார்.
கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவை தலைமையிடமாகக் கொண்ட கூகுளில் எலீஸ் நோட்டனின் புதிய பதவி என்னவென்று இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை.
நியூயார்க் நகரில் உள்ள தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க, மனிதவள தலைமைப் பொறுப்பிலிருந்து தற்போது விலகுவதாக எலீஸ் நோட்டன் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


