மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தோல்வி அடைந்த செயற்கைக்கோள் திட்டம்: ஈரான்

ஈரான் தன் செயற்கைக்கோளான ஜாபரை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தத் தவறிவிட்டது என்று மாநில ஐஆர்என் டிவி தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2020, 8:23 am

தங்களின் செயற்கைக்கோளான ஜாபரை, பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தத் தவறிவிட்டது ஈரான் என்று மாநில ஐஆர்என் டிவி தெரிவித்துள்ளது.

இந்தச் செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என்று ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்தார்.

செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தகுந்த வேகம் இல்லாததால் இந்த செயல்முறை முழுமைப் பெறவில்லை என்று ஹொசைனி கூறினார்.

ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயல்படுவார்கள், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

Story image

90 கி.மீ தூரமுள்ள ஜாபர் வண்ண கேமராக்கள் பொருத்தப்பட்ட தொலைநிலை உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ஆகும். விண்வெளியிலிருந்து எண்ணெய் இருப்பு, சுரங்கங்கள், காடுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2019-இல், ஈரானிய ராக்கெட் அதன் ஏவுதளத்தில், வடக்கு ஈரானிலுள்ள இமாம் கோமெய்னி விண்வெளி மையத்தில் வெடித்தது.

கவோஷ்கர் -3 (எக்ஸ்ப்ளோரர் -3) பிப்ரவரி 2010 இல் பயோ காப்ஸ்யூல் கேரியரைப் பயன்படுத்தி ஈரான் தனது முதல் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியது.

2009-இல் ஓமிட் (ஹோப்) எனும் செயற்கைக்கோள் ஈரானிலேயே  உருவாக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.