இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா; 4,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் இலங்கை கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கொழும்பு: இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் இலங்கை கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கரோனா உறுதி செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் 181 பேர் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கை மீறியவர்களைக் கைது செய்யும் பணியின் போது, ஒரு கப்பல் மாலுமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த மாலுமிக்கு முதல் வாரத்தில் எந்த அறிகுறியும் தென்படாததால் தான் அவர் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். 181 பேரில் 90% பேருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...