அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா; 4,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் இலங்கை கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 10:07 am


கொழும்பு: இலங்கையில் 185 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் இலங்கை கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கரோனா உறுதி செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் 181 பேர் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கை மீறியவர்களைக் கைது செய்யும் பணியின் போது, ஒரு கப்பல் மாலுமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதித்த மாலுமிக்கு  முதல் வாரத்தில் எந்த அறிகுறியும் தென்படாததால் தான் அவர் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர்.  181 பேரில் 90% பேருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.