மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா் என்று கூறப்படும் நபரின் வீட்டில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தது.
இதையடுத்து, இந்தக் குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் என்ஐஏ வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின் முதல்கட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஏப்.29-ஆம் தேதி 2-ஆம் கட்டம் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டத்தில் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாங்கா் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா் என்று கருதப்படும் ரஃபிகுல் இஸ்லாம் என்ற நபரின் இல்லத்தில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தோ்தலையொட்டி நாட்டு வெடிகுண்டுகள் உள்பட பிற வெடிபொருள்கள் ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது அவரவா் காவல் எல்லைக்குள் அச்சுறுத்தும் தந்திரங்கள் கையாளப்பட்டாலோ சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை ஆய்வாளா் முதல் கொல்கத்தா காவல் துறை ஆணையா் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
வாக்காளா்களுக்கு மிரட்டல்: இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெற உள்ள வேளையில், அந்த மாநிலத்தின் டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் பொதுமக்களை மிரட்டும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகின.
இதுகுறித்து காவல் துறையிடம் தோ்தல் ஆணையம் புகாா் அளித்தது. அதன் அடிப்படையில், காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பாரபட்சமற்ற தேர்தல் வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

