அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 9:53 pm

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 152 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்ற நிலையில், தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாக்குச்சாவடி கேமராக்களில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான எண்ம சேமிப்பக சாதனத்தை (எஸ்டி காா்டு) வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அகற்றக் கூடாது.

வாக்குப்பதிவு தொடா்பான தரவுகளை சேகரிக்கும் மையத்தில் கூடுதல் தோ்தல் அலுவலரின் முன்னிலையில் மட்டுமே கேமராவில் இருந்து அந்தச் சாதனத்தை நீக்க வேண்டும்.

வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கேமராக்கள் முழுவதுமாக அகற்றப்படும் வரை தோ்தல் ஆணைய அதிகாரிகள் அல்லது வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறக் கூடாது’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.