ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

டொனால்ட்  டஸ்க்

Updated On :28 அக்டோபர் 2019, 1:21 pm

லண்டன்: பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தமானது பிரெக்சிட் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.  இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் சுமுகமான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யும் நிலை உருவானது. 

அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் இதனை செயல்படுத்தி விட வேண்டும் என்று தீவிரமாக செயலாற்றினார். குறிப்பாக இம்மாத இறுதிக்குள் அதாவது 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி விடும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் அவரது ஒப்பந்த வரைவை இம்மாதம் 19-ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் எம்.பிக்கள் தோற்கடித்தனர். இதையடுத்து அவருக்கு சிக்கல் உண்டானது. அவர் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட்  டஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை ஜனவரி 31, 2020 வரை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.