கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நியூஸிலாந்து மசூதி தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் ஹாரிஸன் டாரன் என்பவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:49 am

ANI

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் ஹாரிஸன் டாரன் என்பவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள். பலத்த காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், துருக்கியைச் சேர்ந்த 46 வயது ஆண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இவருடைய மரணத்தை துருக்கி அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.

இதனால் நியூஸிலாந்து மசூதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. 

ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த மற்றவர்கள் உடல் நலம் தேறிய நிலையில், இவருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவருக்கு நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.