மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

2018ல் அறிவிக்கப்பட்ட சியோல் அமைதிக்கான விருதைப் பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி

இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்ட தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருதினை மோடி பெற்றுக் கொண்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 7:32 am


சியோல்: இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்ட தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருதினை மோடி பெற்றுக் கொண்டார்.

அமைதி விருது அறக்கட்டளை சார்பில் சியோலில் நடைபெற்ற விமரிசனையான விழாவில், பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இவ்விருது தான் ஒருவருக்கு வழங்கப்பட்ட விருதாக இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கௌரவிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது, இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது, ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையே நிலவும் பொருளாதார இடைவெளியைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது, உலக அமைதியை ஏற்படுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவது ஆகியவற்றுக்காக, 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை தென் கொரிய நாடு, பிரதமர் மோடிக்கு வழங்கியது. 

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இவ்விருதானது, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தென்கொரியா சென்றிருக்கும் மோடியிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்ட போது மோடி கூறியிருந்ததாவது, தென் கொரிய நாட்டுக்கு நன்றி. நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளின் சார்பில் மிகுந்த பணிவுடன் இந்த விருதினை ஏற்றுக்கொள்கிறேன் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
 

உலக அமைதிக்குப் பங்களித்து வருபவர்களைப் பாராட்டும் நோக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இந்த விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெறும் 14-ஆவது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.