டாக்கா: பெண்கள் உரிமை சார்ந்த அமைப்புகளின் நீண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக, வங்கதேச திருமணப் பதிவு விண்ணப்பத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் திருமணத்தை சட்டபூர்வமாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தில், பெண்கள் தங்களது தற்போதைய திருமண நிலையைத் தெரியப்படுத்த, திருமணமாகாத பெண் என்னும் பொருள்படும் 'குமாரி' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த வார்த்தைக்கு கன்னித்தன்மை உடையவர் என்னும் பொருளும் உண்டு. கணவனை இழந்தவர் மற்றும் விவகாரத்தானவர் ஆகியன விண்ணப்பத்தின் மற்ற இரண்டு தேர்வுகளாகும்.
இந்நிலையில் இந்த வார்த்தைப் பயன்படானது பெண்களை அவமானப்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்று அந்நாட்டில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இத்தனை நாளாக நடைபெற்று வந்த அவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி வங்கதேச இளம்பெண்களுக்கான திருமண பதிவு விண்ணப்பத்தில் இனி 'குமாரி' என்னும் வார்தைக்குப் பதிலாக 'ஒபிபஹிதா' (திருமணமாகாத இளம்பெண்) என்னும் வார்த்தை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம் மணமகன்களும் இனி தங்களது திருமண நிலையை விண்ணப்பத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று தனியான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வங்கதேச பெண்கள் உரிமை அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


