பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீர் பற்றிய பதிவு: பாகிஸ்தான் அதிபருக்கு ட்விட்டர் நோட்டீஸ் 

காஷ்மீர் பற்றிய பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2019, 11:36 am

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பற்றிய பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் கணக்கில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று காஷ்மீர் நிலவரம் தொடர்பாக வெளியிட்டிருந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதையொட்டி ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தனது  கருத்துகளையும் பகிர்ந்திருந்தார்  

இந்நிலையில் காஷ்மீர் பற்றிய அவரது பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில்  அல்வியின் பதிவு தொடர்பாக தங்களுக்கு புகார் வந்துள்ளதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் தங்கள் நிறுவன விதிமுறைகளின்படி அதில் எதுவும் விதிமீறல்கள்  இல்லை என்றும், உடனடியாக அல்வி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்த தகவலை பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி  செய்தியாளர்களிடம் பகிர்ந்துடன், ட்விட்டர் நிறுவனம் மற்றும் இந்தியாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.  

ட்விட்டர் பதிவிற்காக இதேபோல் நோட்டீஸ் தனக்கும் வந்துள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் முராத் சயீதும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பற்றிய பதிவுகளுக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200-க்கும்மேற்பட்ட கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.