பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாலிவுட் நடிகையை ஐநா கவுரவ பதவியில் இருந்து நீக்குமாறு யுனிசெப்புக்கு பாகிஸ்தான் பெண் அமைச்சர் கடிதம் 

காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து பிரபல பாலிவுட் நடிகையை ஐநா அமைப்பின் கவுரவ பதவியில் இருந்து நீக்குமாறு ஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு, பாகிஸ்தான் பெண் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 12:04 pm

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து பிரபல பாலிவுட் நடிகையை ஐநா அமைப்பின் கவுரவ பதவியில் இருந்து நீக்குமாறு ஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு, பாகிஸ்தான் பெண் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

ஐக்கிய நாடுங்கள் சபையின் ஓர் அங்கமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனுக்காக 'யுனிசெப்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பிற்கான நல்லெண்ணத் தூதராக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வருகிறார்.  காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அவர் சமீபத்தில்கருத்து தெரிவித்திருந்தார். 

Story image

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவை யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு, யுனிசெப் அமைப்அமைப்பின் செயல் இயக்குநருக்கு, பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷிரீன் மஸாரி கடிதம் எழுதியுள்ளார்.     

இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பின் இயக்குநர் ஹென்ரீட்டா போருக்கு, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சரான ஷிரீன் மஸாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

போருக்கு அதுவும் ஓர் அணு ஆயுத போருக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது என்பது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவியின் மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.அவர் உடனடியாக அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படாவிட்டால், சமாதானத்திற்கான நல்லெண்ணத் தூதர் என்னும் ஐநாவின் சிந்தனையே சர்வதேச சமூகத்தின் முன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.