சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் சாவு

1997-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பாதுகாப்பான 3 நகரங்களில் ஒன்றாக கருதப்படும் எல் பாஸோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:43 am

ENS

1997-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பாதுகாப்பான 3 நகரங்களில் ஒன்றாக கருதப்படும் எல் பாஸோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள எல் பாஸோ நகரில் மர்ம நபரால் சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் அமைந்துள்ள சிலோ விஸ்டா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வால்மார்ட்டில் திடீரென புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்த கோர சம்பவத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாகாண ஆளுநர் உறுதி செய்தார். சுமார் 3 ஆயிரம் பேர் சூழ்ந்திருந்த வால்மார்ட்டில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாட்ரிக் க்ரூஸியூஸ் எனும் 21 வயது இளைஞருக்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக எல் பாஸோ போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 4 பேர் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வால்மார்ட்டில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் கலிஃபோர்னியாவில் உணவுத்திருவிழாவின் போது சாண்டினோ வில்லியம் லீகன் என்ற 19 வயது இளைஞர் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான். 

அமெரிக்காவில் 2019-ல் இதுவரை மட்டும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 96 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இதுபோன்று பொது இடங்களில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 21 வயதுக்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.