ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

எஃப்-16 விவகாரத்தில் இந்தியா பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, தனது மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வருவது குறித்து அந்தப் பத்திரிகை சந்தேகம் எழுப்பியது.

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 10:29 am

இந்தியாவுடனான கடந்த பிப்ரவரி மாத வான் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்ததில், அவற்றில் ஒன்று கூட குறையவில்லை என்று தெரிய வந்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "ஃபாரின் பாலிஸி' பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதன் மூலம், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, தனது மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வருவது குறித்து அந்தப் பத்திரிகை சந்தேகம் எழுப்பியது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு விமானப் படைகளுக்கும் நடந்த வான் சண்டைக்குப் பிறகு, பாகிஸ்தானிலுள்ள எஃப்-16 விமானங்களை தங்கள் நாட்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியாகக் கூறப்படுவது குறித்து எதுவும் தெரியாது. அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்யப்பட்டதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்து எங்களால் கருத்து கூற முடியாது.

பயங்கரவாத விவகாரத்தைப் பொருத்தவரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ உதவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய விமானப் படை துணை தளபதி ஆர்.ஜி.வி. கபூர், 8 முதல் 10 கி.மீ. இடைவெளியில் இரு விமானங்கள் வீழ்த்தப்பட்டு அதிலிருந்த விமானிகள் பாராசூட் மூலம் குதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு விமானம் எஃப்-16 ரகத்தைச் சேர்ந்தது என்பது அது வெளியிட்ட மின்னணு குறியீட்டு அலைகள் மூலம் தெரிய வந்ததாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அந்த ஆதாரங்களும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இந்தியா பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கஃபூர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.