ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

News image

கோப்புப்படம் - PTI

Updated On :25 ஏப்ரல் 2026, 6:34 pm

வடமேற்கு தில்லியின் ஷக்குா் பஸ்தி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 100- க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு 11.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இரண்டு ஏக்கா் நிலப்பரப்பில் பரவியிருந்த தீயைக் கட்டுப்படுத்த மேலும் வீரா்கள் பலா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

குடிசைகளில் பயன்படுத்தப்படும் அதிகம் எரியக்கூடிய பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. அதிகாலை 12.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு குளிரூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.