வடமேற்கு தில்லியின் ஷக்குா் பஸ்தி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 100- க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவு 11.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இரண்டு ஏக்கா் நிலப்பரப்பில் பரவியிருந்த தீயைக் கட்டுப்படுத்த மேலும் வீரா்கள் பலா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
குடிசைகளில் பயன்படுத்தப்படும் அதிகம் எரியக்கூடிய பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. அதிகாலை 12.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு குளிரூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


