தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஆம் இந்த உலகத்தில் அதுபோன்ற சிறைச் சாலையும் இருந்திருக்கிறது. அதுதான் மெக்ஸிகோவின் மரியா தீவில் இருக்கும் சிறைச்சாலை.
மெக்ஸிகோவின் முக்கிய நிலப்பரப்பில் இருந்து படகை எடுத்துக் கொண்டு 8 மணி நேரம் பயணித்தால் மரியா தீவில் அமைந்திருக்கும் இந்த சிறைச்சாலையை அடையலாம்.

இந்த சிறைச்சாலைக் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில் இதனை மூடி விட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதான் அந்த சிறைச்சாலையின் நுழைவு வாயில்.

இந்த சிறை வரலாற்றில் இதுவரை 64,000 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக இங்கே இருந்த 584 கைதிகளும் வேறு முக்கியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அழகும், நல்ல தட்பவெப்பநிலையும் கொண்ட இந்த சிறைக்கூடம், தண்டனைக்கான இடமாக இருக்காது என்று கருதியே இது மூடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

விடுதலையானாலே வெளியேற விரும்பாத நிலையில் கைதிகள் தப்பித்துச் செல்லாமல் தடுக்க வீணாக இருக்கும் முள் வேலிகள்.

சிறைக் கூடத்தின் முக்கிய இடம். இந்த சிறைக் கூடம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த சிறைக் கூடத்தின் சிறை அறைகளை நாம் பார்க்காமல் போனால் எப்படி? இதோ இரண்டு கைதிகள் அடைக்கப்படத்தக்க ஒரு சிறை அறை.
இந்த சிறையைச் சுற்றி பாதுகாப்புக்கு ஆட்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்துக்குள் இருக்கும் அழகிய சாலைகள்.
இந்த சிறைக்குள் இருக்கும் ஒரு சில சிறைக் கைதிகளும் தப்பிச் சென்றிருக்கார்களாம். அவர்கள் இந்த தீவின் 10 - 20 கிலோ மீட்டர் தூரப் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு சிறைத் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவார்களாம்.
தப்பிச் செல்ல முடியாததற்குக் காரணம் இது ஒரு தீவு. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு இங்கு ஒரு சிறிய படகு வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி இந்த மரியா தீவு புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


