எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இந்தியாவின் மிஷன் சக்தியால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து: கதறும் நாசா

விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:32 am

ENS


வாஷிங்டன்: விண்வெளியில் இருந்த செயற்கைக் கோளை இந்தியா தாக்கி அழித்தது மிக மோசமான சம்பவம் என்று வர்ணித்திருக்கும் நாசா, இதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

இந்தியா தாக்கி அழித்த செயற்கைக் கோள் தற்போது 400 துண்டுகளாகச் சிதறி, விண்வெளியில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மோதி சேதம் ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாசா கூறுகிறது.

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், இதுவரை 60 துண்டுகள் எங்கெங்கே சிதறிக் கிடக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது மிகவும் மோசமான விஷயம். சர்வதேச விண்வெளி மையத்தின் மீது இந்த துண்டுகள் அல்லது துகள்கள் பயணிப்பது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

இந்தியா பரிசோதித்த ஏசாட் சோதனையால், இந்திய செயற்கைக் கோளை தாக்கவிருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டு தற்போது 400 துண்டுகளாக விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது வரை அவற்றை கண்டறியும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப உதவியுடன் 10 செ.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்கும் துண்டுகளை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தற்போது வரை 60 துண்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம். அதில் 24 துண்டுகள் விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்தான வகையில் பயணித்து வருகிறது என்றார்.

இதுபோல ஒரு நாடு செய்தால், பிற நாடுகளும் இதை முயற்சித்துப் பார்க்கும். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால் நாசாவுக்கு ஏற்படும் பாதிப்பு விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் குறித்து நாசா ஒவ்வொரு மணி நேரமும் புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டே வர வேண்டிய நிலையும் உள்ளது. இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால், நாசாவுக்கான ஆபத்து அளவு தற்பொழுது 44% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.