கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை; ரூ. 8 கோடி அபராதம் 

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:59 pm

IANS

சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தென் கொரிய அதிபராக இருந்தவர் லீ ம்யூங் பாக். இவர் தனது ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக அவரது சகோதரர் பெயரில் இயங்கி வந்த DAS எனும் நிறுவனத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பலத்த குற்றசாட்டு எழுந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில் ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது 

வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நான்காவது அதிபர் லீ ம்யூங் பாக் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.