நியூயார்க்: வடகொரியாவை மொத்தமாக அழித்து விடுவோம் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல் நாய் குரைப்பதைப் போன்றது என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ தெரிவித்துள்ளார்.
வடகொரியா சமீபமாக பல்வேறு ஏவுகணை சோதனைளையும் அணு ஆயுத சோதனைகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக அமெரிக்காவும், ஐநா சபையும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இவற்றின் விளைவாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐநா சபையின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாயன்று பேசும் பொழுது, 'அமெரிக்கா வலிமையையும் பொறுமையும் நிறைந்த ஒரு நாடு; ஆனால் எங்களுக்கோ அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கோ தொல்லை கொடுப்பதன் மூலம், வடகொரியா அதனை தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருந்தால், வடகொரியாவை மொத்தமாக அழிப்பதனைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை' என்று தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த உரையின் பொழுது வடகொரியப் பிரதிநிதிகள் யாரும் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது ட்ரம்ப்பின் உரை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, 'இப்படி எல்லாம் நாய் குரைப்பது போன்று பேசுவதன் மூலம் எங்களை பயமுறுத்தலாம் என்று ட்ரம்ப் எண்ணினால் அது வெறும் நாய் கனவுதான்' என்று தெரிவித்தார்.
வடகொரியாவினைப் பொறுத்த வரை நாய் கனவு என்பது அபத்தம் மற்றும் பொருள் இல்லாத ஒன்றை பற்றிக் குறிப்பிடும் வார்த்தையாகும் என்பது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


