2017 ஆம் ஆண்டில் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும் உடனடியாக குறீப்பிடத் தக்க அளவில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சிலர் செனட் சபை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதை இங்கு நமது இந்திய ஊடகங்களில் பாராட்டிய சுவடுகள் மறைவதற்குள்ளாகவே முதலில் ட்ரம்ப்பின் அமெரிக்க நிறவெறி, இனவெறிக் கொள்கையைக் காரணமாக்கி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய மென்பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை வீரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த இந்திய வணிகர் ஹர்னிஷ் படேல், தெற்கு கரோலினாவில் இருந்த தனது வீட்டு உபயோகப் பொருள் விற்பனை அங்காடி வாயிலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார் என செய்தி வந்தது. ஹர்னீஷை அடுத்து தற்போது, ஆந்திராவைச் சேர்ந்த இந்தியர் சசிகலாவும் அவரது 7 வயது மகனும் கத்தியால் குத்தப் பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது.