தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தங்கையை கழுத்தை நெரித்துக் கொன்ற சிறுவன்!

உன் கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தனது தங்கையை, பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

IANS

லாகூர்: உன் கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தனது தங்கையை, பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் 'டான்' செய்தித்தாளில் வெளிவந்துள்ள விபரம் வருமாறு:

கடந்த வெள்ளியன்று ஒன்பது வயது சிறுமி இமான் தன்வீர் லாகூரின் ஷாலிமர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். கழுத்தினை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.இது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரனை நடத்திய போலீசார்,சிறுமியின் சித்தியான  சபாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் தொடர் விசாரணையின் முடிவில் இமானின் சகோதரனான 11 வயது அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டான். இந்த கைது தொடர்பாக காவால் துறை அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், 'ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அப்துல் மற்றும் இமான் ஆகிய இருவரும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.

பாட்டி இல்லாத சமயத்தில் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். அப்பொழுது ரகுமானின் கையெழுத்து மோசமாக உள்ளதாக. இமான் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுமான், அருகிலிருந்த துப்பட்டா ஒன்றினைக் கொண்டு, இமானின் கழுத்தினை நெரித்துக் கொன்றுள்ளான்.பின்னர் விசாரணையின் பொழுது அவன் உண்மையினை ஒப்புக் கொண்டான்' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.