காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஜப்பான் மன்னருடனான சந்திப்பு மிகப்பெரிய கௌரவம்: பிரதமர் மோடி

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


டோக்யோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா - ஜப்பான் நல்லுறவு குறித்து ஜப்பான் நாட்டு மன்னர் அகிஹிடோவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான சந்திப்புக்குப் பிறகு, மன்னர் அகிஹிட்டோவை சந்தித்தார்.

ஜப்ன் மன்னர் அகிஹிட்டோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா - ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான விஷயங்கள் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.