கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

துருக்கி ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிப்பு: அந்நாட்டு அதிபர் அறிவிப்பு

துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

PTI

அங்காரா: துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

மேலும், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்கள் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான அசம்பாவிதங்களில் 161 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், அங்காராவில் உள்ள சாணக்யா மாளிகையில் இருந்து பேசிய அந்நாட்டு பிரதமர் பினாலி யில்டிரிம், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ராணுவ தலைமை தளபதி ஹூலுசி அகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 161 பர் பலியாகினர். 1,440 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் இறையாண்மையை காக்கும் வகையில் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.