பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வங்கதேச மசூதி மீதான தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு

வங்கதேசத்தில், ஷியா மசூதியில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமிய ஸ்டேட் (ஐ.எஸ்.) இயக்கம் பொறுப்பேற்றுள்ளது

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

IANS

வங்கதேசத்தில், ஷியா மசூதியில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமிய ஸ்டேட் (ஐ.எஸ்.) இயக்கம் பொறுப்பேற்றுள்ளது

வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள ஷிப்கஞ்சி நகரில் உள்ள அல்-முஸ்தபா ஷியா மசூதிக்குள் நேற்று நுழைந்த மூன்று பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதம் பொறுப்பேற்று டூவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளதாக, ஜிகாதி தீவிரவாதத்தை கண்காணித்து வரும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட எஸ்.ஐ.டி.இ. புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

எனினும், ஐ.எஸ். இயக்கம்  வங்கதேசத்தில் செயல்படவில்லை என அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்டோர் உண்மையான முஸ்லீம்கள் இல்லை என வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார்.

ஆனால், வங்கதேசத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆங்கில சஞ்சிகையான தாபிக் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.