தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெடிகுண்டு: கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்

விமானத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதால், ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 8:33 am

விமானத்தில் வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதால், ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மொரிஷியஸ் தீவிலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பப்பட்டது. இதையடுத்து விமானம் கென்யாவின் மொம்பாசா நகரில் உள்ள மொய் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மொரிஷியஸிலிருந்து இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் இரவு 10.30 மணி) ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஏ.எப்.463, பாரீஸ் நகருக்குப் புறப்பட்டது.

விமானத்தில் 459 பயணிகளும், 14 பணியாளர்களும் இருந்தனர்.

விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கு இடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரவு 1 மணியளவில் மொய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்

கடற்படை மற்றும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு போன்ற பொருள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டது.

பிரான்ஸுக்கு காலை 5.50 மணிக்கு (இந்திய நேரம் 10.20) சென்றடையவேண்டிய விமானம், தற்போது வரை மொம்பாசா விமான நிலையத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி சார்லஸ் ஓவினோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.