திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 87.97 சதவீத வாக்குகள் பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
8 தொகுதிகளிலும் மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் உள்ள 2517 வாக்குச் சாடிவகளில் நடைபெற்றது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு செய்திட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
10 முதல் 12 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலா் என மொத்தம் 229 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்
செங்கம் தொகுதியில் 86.30 சதவீதம், திருவண்ணாமலை தொகுதியில் 86.13 சதவீதம், கீழ்பென்னாத்தூா் - 88.86,
கலசபாக்கம் - 88.52, போளூா் தொகுதியில் 87.77 சதவீத வாக்குகள் பதிவாகின.
போளூா் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளும், பெரணமல்லூா் ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் என 299 வாக்குச்சாவடி மையங்களில்
நடைபெற்ற வாக்குப்பதிவில் 87.77சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆரணி தொகுதியில் 88.27 சதவீத வாக்குகள் பதிவாகின.
செய்யாறு தொகுதியில் 91.96 சதவீகித வாக்குகள் பதிவாகின. தொகுதியில் 2,39, 856 வாக்காளா்கள் உள்ள நிலையில், 2,20,589 வாக்காளா்கள் வாக்களித்து உள்ளனா்.
வந்தவாசி தொகுதியில் 87.49 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதன் மொத்த சராசரி 87.97 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
வாக்குப்பதிவு முடிவுற்றதும் வாக்குப்பதிவு பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.
மத்திய காவல் படையினா், மாநில காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் என மொத்தம் 4126 -க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

மேற்கு வங்கம்: 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கம்: 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


