அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பாலகனாய் வந்த பரம்பொருள்!

திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான் இறைவனை உருகிப் பாடிய திருமுறைப் பாடல்களே திருவாசகம்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 11:48 am

திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான் இறைவனை உருகிப் பாடிய திருமுறைப் பாடல்களே திருவாசகம்.

காலங்கள் தோறும் இதன் புகழ் உலகெங்கும் பரவிய வண்ணம் உள்ளது என்பதே இதன் சிறப்புக்கு அடையாளம். எட்டாம் திருமுறையில் இரண்டாம் பதிகமாக அமைவது கீர்த்தித் திருஅகவல். சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமையை தில்லையில் பாடினார் மாணிக்கவாசகர்.

இப்பதிகத்தில் "ஓரி' எனப்படும் திருத்தலத்தில் தனது பக்தையைக் காக்க பரம்பொருளாகிய இறைவன் பச்சிளம் பாலகனாக வடிவெடுத்த அற்புதம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்தில் "விருத்த குமார பாலர் ஆன படலம்' என்று இந்த வரலாறு விளக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓரியூர் திருக்கோயில் இறைவர் சேயும் ஆனவர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பெயர் மட்டுவார் குழலியம்மை. மேற்குப் பார்த்த கோயில். மாதாந்திர பெüர்ணமியன்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தொடரும் சகலவிதமான துன்பங்களும் விலகும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கேற்ற மணாளன் வரனாக அமைவான். குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தும் தம்பதியர்க்கு நல்ல சந்தான பாக்கியம் கிடைக்கும். நோய்கள் அகன்று பூரண நலம் கிடைக்கும். இளமையும், தீர்க்க ஆயுளும் கிட்டும் என்பது நம்பிக்கை.

மதுரை மாட்டுத்தாவணி, திருவாடானை, தேவகோட்டை, சுந்தரபாண்டியன் பட்டிணம் ஆகிய ஊர்களில் இருந்து ஓரியூருக்கு நேரடிப் பேருந்து போக்குவரத்து உள்ளது.

வெ. கணேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.