வைணவ சமயத்தின் ஆணிவேராக இருந்து தொண்டாற்றியவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரைத் திருவாதிரை நாளில் அவதரித்த இவருக்கு ஸ்ரீபாஷ்யகாரர், உடையவர், எம்பெருமானார், எதிராஜர், இளையாழ்வார், திருப்பாவை ஜீயர் என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. இவரது மார்க்கம், "விசிஷ்டாத்வைம்' எனப்பட்டது.
இவர் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல முக்கிய வைணவத் தலங்கள் தென்னகத்தில் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாட்டு முறைகளையும், விழா நடைமுறைகளையும் ஒழுங்கு படுத்திய பெருமை இவருக்கு உண்டு. எக்குலத்தைச் சார்ந்தவராயினும் அன்பும், தொண்டு உள்ளமும் கொண்டு பக்தியினால் இறைவனை அடையலாம் என்பதே நமக்கு அவர் காட்டிய வழி!
ஆதிசேஷனின் மறு அவதாரம் என புராணங்கள் கூறி அவரைப் பெருமை படுத்தும். ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஸ்ரீரங்கத்தில் "தானான திருமேனி', மேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் "தமர் உகந்த திருமேனி', ஸ்ரீபெரும்புதூரில் "தாம் உகந்த திருமேனி'யாக விளங்குகிறார்.
இம்மாதம் 4 ஆம் தேதி ஸ்ரீராமானுஜர் ஜயந்தி, அவரது அவதாரத்தலத்திலும் மற்றும் முக்கியமான வைணவ ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


