லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்!

வைணவ சமயத்தின் ஆணிவேராக இருந்து தொண்டாற்றியவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரைத்...

News image
Updated On :2 மே 2014, 5:35 am

வைணவ சமயத்தின் ஆணிவேராக இருந்து தொண்டாற்றியவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரைத் திருவாதிரை நாளில் அவதரித்த இவருக்கு ஸ்ரீபாஷ்யகாரர், உடையவர், எம்பெருமானார், எதிராஜர், இளையாழ்வார், திருப்பாவை ஜீயர் என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. இவரது மார்க்கம், "விசிஷ்டாத்வைம்' எனப்பட்டது.

இவர் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல முக்கிய வைணவத் தலங்கள் தென்னகத்தில் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாட்டு முறைகளையும், விழா நடைமுறைகளையும் ஒழுங்கு படுத்திய பெருமை இவருக்கு உண்டு. எக்குலத்தைச் சார்ந்தவராயினும் அன்பும், தொண்டு உள்ளமும் கொண்டு பக்தியினால் இறைவனை அடையலாம் என்பதே நமக்கு அவர் காட்டிய வழி!

ஆதிசேஷனின் மறு அவதாரம் என புராணங்கள் கூறி அவரைப் பெருமை படுத்தும். ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஸ்ரீரங்கத்தில் "தானான திருமேனி', மேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் "தமர் உகந்த திருமேனி', ஸ்ரீபெரும்புதூரில் "தாம் உகந்த திருமேனி'யாக விளங்குகிறார்.

இம்மாதம் 4 ஆம் தேதி ஸ்ரீராமானுஜர் ஜயந்தி, அவரது அவதாரத்தலத்திலும் மற்றும் முக்கியமான வைணவ ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.