/

பழமொழி நானூறு

அரசர் தம்மை எதிர்த்தும் நம் கீழ் வாழும் மக்களுக்குத் தீங்கு செய்தும் செயல்படும் எதிரிகளை ஒழித்தலும் ஒடுக்குதலும் வேண்டும்.

News image
Updated On :1 ஜனவரி 2023, 1:02 pm

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்,
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதர் இல். (287)

அரசர் தம்மை எதிர்த்தும் நம் கீழ் வாழும் மக்களுக்குத் தீங்கு செய்தும் செயல்படும் எதிரிகளை ஒழித்தலும் ஒடுக்குதலும் வேண்டும். அவ்வாறு செயல் முடிக்காமல் யானை மேல் அம்பாரி வைத்து செல்லுதல் பெருமையாகாது; குற்றம். வானிலிருந்து விழும் நீர்த்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி பறவையைப் போல் ஒரு குறிக்கோளை நோக்கித் தவம் செய்பவர் கூடப் பொருந்தாதவரை இகழாமல் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.