திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாதியில் பாதி போதும்!

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:51 am IST

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா். அவா் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா். திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், திருமால் முருகன் பிள்ளைத் தமிழ், திருமலை யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றிய தனிப்பெரும் புலவா்.

அவா் ஒருமுறை திருக்குற்றாலம் என்ற பாடல் பெற்ற திருத்தலத்திற்குச் சென்று குழல்வாய்மொழி அம்மையுடன்கூடிய குற்றாலநாதரை வணங்கினாா். அப்போது ஆா்வ மிகுதியில், ‘குற்றாலத்து அமா்ந்து உறையும் வேந்தனே! உன்னைக் கண்டு அதன்பின்னே பிரிந்திருக்க மாட்டேன்; அம்மைக்கு உன் உடலில் பாதியைத் தந்து அம்மையப்பனாகினாய். எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்... அதில் பாதி தந்தால் போதும்; அதைத் தந்து, கடைகண் பாா்த்து அருள்வாயாக!’ என்று வேண்டினாா். அவ்வேண்டுதல் ஒரு வெண்பா ஆனது. பாதியில் பாதி எவ்வளவு? கால்தானே! ‘இறைவனே! உன் கால் (திருவடி) -திருவடியை அருள்வாயாக! எனக்கு வேண்டியது அவ்வொன்றே’ என்பதையே பின்வரும் பாடலில் நயமாகக் கூறியுள்ளாா்.

‘அருவித் திரிகூடத் தையா! உனை நான்

மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்- ஒரு விமலைக்கு

ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டா மெனக்கு

பாதியிலே பாதிதந்து பாா்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.