சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பணி செய்து மணங்கொண்டார்!

சமூகத்தில் குடும்ப வாழ்க்கை மிக முக்கியமான ஒன்றாகும். இக்குடும்ப உறவுகள் திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இத்திருமண முறைகள் சமூகத்தில் எப்படித் தோன்றியது என்பதைத் தொல்காப்பியம் (தொல்-1089)

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

முனைவர் பு. இந்திராகாந்தி

சமூகத்தில் குடும்ப வாழ்க்கை மிக முக்கியமான ஒன்றாகும். இக்குடும்ப உறவுகள் திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இத்திருமண முறைகள் சமூகத்தில் எப்படித் தோன்றியது என்பதைத் தொல்காப்பியம் (தொல்-1089) குறிப்பிடுகிறது. இவ்வாறு தோற்றம் பெற்ற திருமணம் இன்று பல ஆடம்பரங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறது. இருப்பவர்கள் பலகோடி செலவு செய்யும் நிலையும், இல்லாதவர் மணமகனுக்கு வரதட்சணை கொடுக்க முடியாத நிலையும் நிலவுகிறது. காதல் திருமணத்திற்கும் இது விதிவிலக்கல்ல.
பழந்தமிழர் சமூகத்தில் ஏறு தழுவி மணத்தல், இளவட்டக்கல் தூக்கல் போன்ற திருமணங்கள் வழக்கில் இருந்துள்ளன. மணம் பேசும்பொழுது பொன் கொடுத்து, பெண் பெற்றுள்ளனர். இவை "முலை விலை', "மலைபாற் கூலி' என்கிற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி மனம் கவர்ந்த பெண்ணை மணம் செய்துகொள்ள மணப் பெண்ணின் தந்தையிடம் பணி செய்தேனும் அவளைப் பெற்றுள்ளனர் என்பதை சங்கப் பாடல்களிலிருந்து அறிய முடிகிறது.

""அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்,
பெறல்அருங் குரையள் ஆயின், அறம்தெரிந்து,
நாம்உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம், இருப்பின்,
தருகுவன் கொல்லோ தானே-விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன்இமிர் அகன்கரைப் பகுக்கும்
கானல்அம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?''
(அகம்-280}4}14)

நலம் தரக்கூடிய சீரியப் பொருள்களோடு அணிகலன்களைத் கொடுத்தாலும் பெறுதற்கு அரியவள். அதனால் நாம் தங்கியுள்ள இந்நாட்டை விட்டு, பரதவனாம் அவள் தந்தையுடன் கூடி, பெரிய கடற்கரையினை அடுத்துள்ள உப்பளத்திலுள்ள உப்பினை விற்றுத் திரிந்து, வருந்தியும் பெருங்கடல் ஆழத்தில் புணையுடன் சென்றும், அவன் வயமாகியும் அவனுக்குப் பணிந்தும் அவளைச் சார்ந்தும் இருப்போமானால், அறத்தை எண்ணிப்பார்த்து, ஒருவேளை தானே முன்வந்து நாம் விரும்பும் தலைவியை நமக்கு மணம் செய்து தருவானோ? என்று தன் நெஞ்சோடு தலைவன் புலம்புவதன் மூலம் அன்றைய சமூகத்தில் பெண் வீட்டில் பணிசெய்து மணக்கும் நிலை இருந்துள்ளதை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.