17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருளில் ஒரு காதல்

டி. அந்தோணி தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்'.

News image
Updated On :31 மே 2026, 2:23 pm IST

டி. அந்தோணி தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்'. மும்பை மாடல் அழகி மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா, ஆலம்ஷா, மாதங்கி உள்ளிட்ட பலர் கதையின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோய் ரெடா, அசோக்

ஸ்ரீதரன் இருவரும் இசையமைக்கிறார்கள். ஜெய்கர் ஹரிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'சிறுவயதிலேயே தாயை இழந்த கதாநாயகன் மது, மாது என இருட்டு உலகில் வாழ்க்கையை கழிக்கிறான். இந்தச் சூழலில் அவனது வாழ்க்கையில் காதல் நுழைகிறது.அது அவனது வாழ்க்கையைப் புரட்டி போட்டதா? அவனது இருட்டு உலகை மாற்றியதா? என்பதே கதை.

சினிமா மீதான ஆசையால் என்ஜினீயரிங் படித்து, அமெரிக்காவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டு வந்திருக்கிறேன். சிறு வயது முதலே கதை, கேமிரா என மனதுக்குள் ஓர் அலையடிக்கும். அந்த விருப்பத்தில் அதை முழுமையாகக் கற்று குறும்படங்கள் எடுத்தேன். அதை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பினேன். அதற்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரங்கள் என்னை தொடர்ந்து பயணம் செய்து வைத்துள்ளது.

காதலை புதுமையான பாணியில் சொல்ல நினைத்து முயற்சித்துள்ளேன். இது ஒரு மாறுபட்ட ரொமான்ஸ் காதல் கதையாக இருக்கும். இது எனது முதல் படைப்பு. இந்தப் படைப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜூலை மாதம் படத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.