தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்த இருவா் கைது

மத்திய மற்றும் மேற்கு தில்லியில் போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்து, பொட்டலமிடும் கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:00 am IST

மத்திய மற்றும் மேற்கு தில்லியில் போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்து, பொட்டலமிடும் கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயா்களில் போலி கைப்பேசி தொடா்பான பொருட்களைப் பொட்டலமிட்டு சந்தையில் விற்பனை செய்வதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குற்றப்பிரிவின் ஒரு குழு சனிக்கிழமை தில்லியின் பல இடங்களில் ஒரு பெரும் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்தச் சோதனைகளின் போது, கரோல் பாக் பகுதியின் ரெகா்புரா பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிடங்குகள் சீல் வைக்கப்பட்டன. அங்கு போலிப் பொருட்கள் பொட்டலமிடப்பட்டு, முத்திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலிப் பொருட்களுக்கான பொட்டலப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மோதி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையையும் காவல்துறை சீல் வைத்தது.

இந்த நடவடிக்கையின் போது, ஒரு அச்சகம் மற்றும் மூன்று சேமிப்புக் கிடங்குகளை காவல்துறை கண்டறிந்தது. அங்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி போலிப் பொருட்கள் பொட்டலமிடப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வந்தன. இந்தச் சோதனைகளின் போது, பெருமளவிலான போலிப் பொருட்களும் பொட்டலப் பொருட்களும் மீட்கப்பட்டன.

உற்பத்தி மற்றும் பொட்டலமிடல் செயல்முறையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.