/

கிராமத்து பின்னணியில் அமானுஷ்ய கதை

பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது.

News image
Updated On :22 ஜூன் 2025, 3:03 pm

பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் 'கரிகாடன்'. ஆக்ஷன் மற்றும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைக்கதை இப்படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கடா நடராஜ், நிரிஷா ஷெட்டி, ரித்தி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா, திவாகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.

ரித்தி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...'' இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் இப்படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் காணலாம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அசத்த வைக்கும் இசை என்று திரை மாயாஜாலத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள கடா நடராஜ் கவனமாகத் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை முடித்தார்.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும்'' என்றார் இயக்குநர். பாடல்களுக்கு அதிஷய் ஜெயின் இசையமைக்கிறார்கள். பின்னணி இசையை ஷாங்க் சேஷகிரி வடிவமைத்துள்ளார்.

ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவில் கர்நாடகாவின் சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சிக்கராயபட்னா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தீபக் சி.எஸ்.ஸின் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில், படம் விரைவில் தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.