திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயி...

சிறு குழந்தை வயலில் நாற்று நடும் பணியைத் தொடங்கி வைத்த காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானது.

News image
Updated On :20 ஜூலை 2025, 12:05 am IST

சிறு குழந்தை வயலில் நாற்று நடும் பணியைத் தொடங்கி வைத்த காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானது. அவர் அமெரிக்காவில் வசித்து வரும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சிறுமி யக்ஷ்வினி.

நிகழ்வு குறித்து அவரது தந்தை கார்த்திக்கிடம் பேசியபோது:

'எங்கள் பூர்விகம் அம்பாசமுத்திரம்தான். ஐ.டி. நிறுவனப் வேலைக்காக, நான் எனது மனைவி சீதாலட்சுமியுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏழு வயதாகும் மகள் யக்ஷ்வினி, அமெரிக்காவில் இலிவொன்ஸ் பகுதியில் உள்ள ஒவென் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். எப்போதும் களிமண் விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், உடற்பயிற்சி, பரதம், விவசாயம் போன்றவற்றை இணையத்தில் கானொளி மூலமாக பார்த்துகொண்டே இருப்பார்.

அந்த வகையில் எனது தாயாரும், இயற்கை விவசாயியுமான பா.லட்சுமிதேவியின் வேளாண்மை சார்ந்த காணொளிகளைத் தொடர்ந்து கவனித்துள்ளார். 2025ஆம் ஆண்டு தொடங்கியதுமே மகள் யக்ஷ்வினி, "கோடை விடுமுறைக்கு பாட்டியின் வயலுக்குச் சென்று நாற்று நட வேண்டும்' என்று சொல்லிவிட்டார்.

Story image

ஜூலை 5ஆம் தேதி ஊருக்கு வந்தோம். அடுத்த நாளே மகள் அப்பணியைத் தொடங்கினாள்.

இதனை எதிர்பாராவிதமாக, என் அம்மா கைப்பேசியில் காணொளியாக எடுத்து அதனை முகநூலில் மட்டுமே பதிவு செய்தார். கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ஆம் தேதி வரையும் கிட்டத்தட்ட 1.91லட்சம் பார்வையாளர்கள் அதனைப் பார்த்துள்ளனர். இதில் 9,600 பேர் லைக் (விருப்பம்) போட்டுள்ளனர், 638 பேர் மறுபகிர்வு செய்துள்ளனர்.

402 நபர்கள் வியக்கத்தக்க வகையில் பல நல்ல கருத்துகளைப் பதிந்துள்ளனர்'' என்கிறார் கார்த்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.