தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகள்

சுந்தர் பிச்சையின் பல கைப்பேசி பயன்பாடு: அதிசயம் அல்ல, அவசியம்!

News image
Updated On :2 மார்ச் 2024, 6:30 pm

"கூகுள்', "ஆல்ஃபபெட்' ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலரான சுந்தர் பிச்சை, பல்வேறு வியாபாரத் தேவைகளுக்காக இருபதுக்கும் மேற்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்.

தரமான ஒரு ஸ்மார்ட்ஃபோன் கைப்பேசியை விலைக்கு வாங்குவது, நிர்வகிப்பது, கையாளுவது என்பது பலருக்கும் சவாலாக இருக்கும். ஆனால், இந்தச் சூழ்நிலையில், சுந்தர் பிச்சை இருபது கைப்பேசிகளை ஒரே சமயத்தில் கையாள்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும் விஷயமாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்:

""பாதுகாப்புத் தேவை என்பதற்காக, நான் எனது கைப்பேசிகள், கணினியின், கணக்குகளின் கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றுவதில்லை. அதற்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புக்காக. இரண்டு வகைகளில் கணக்குகளைத் திறப்பதை உறுதிசெய்து கொள்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டுவிக்கும் சக்தியாக மாறப் போகிறது. தொழில் உலகில் மின்சாரம் புரட்சியை உருவாக்கியதைப் போல், செயற்கை நுண்ணறிவும் உலகைப் புரட்டிப் போடும். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு மாறும்.

கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட நேரம் வரை பார்க்கலாம் என்று வரம்புகளை வலியுறுத்துவதன் மூலம் குழந்தைகளை கைப்பேசிகளைக் கையாள அனுமதிக்கலாம்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.