ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பேயை தேடும் கதை

குளோபல் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " பேய காணோம்'.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 2:11 pm


குளோபல் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " பேய காணோம்'. இந்தப் படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தருண் கோபி,  கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் செல்வ அன்பரசன். இயக்குநர் பேசும்போது... ""வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.  இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  படம். கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அந்த காலத்தில் படம் எடுப்பது கஷ்டம்.  ரிலீஸ் செய்வது சுலபம்.  ஆனால் இப்போது படம் எடுப்பது கஷ்டம்.  ரிலீஸ் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்.  முதலில் இந்தப் படத்தின் தலைப்பு எல்லோரையும் சென்று சேர வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருக்கிறது. எங்கள் படக்குழுவை அறியாமலேயே நிறைய நல்லது நடந்திருக்கிறது.  இதில் நடித்துள்ள மீரா மிதுன் என் படத்துக்கும் இன்னும் பெரிய விளம்பரதாராக இருந்தார்.  மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையையே 50 படங்களாக பார்ட் பார்ட்டாக எடுக்கலாம். அவ்வளவு சம்பவங்கள் இருக்கின்றன.  படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது'' என்றார் இயக்குநர் செல்வ அன்பரசன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.