சமீபத்தில் பிரிட்டிஷ் தபால் துறையான "ராயல் மெயில்' பாரம்பரியம் மிக்க 8 தலைவர்களின் தபால் தலைகளை வெளியிட்டிருந்தது. இதில் பிரபல இந்திய இளவரசி சோபியா அலெக்சாண்டிராவின் (1876-1948) தபால் தலையும் அடக்கம்.
இனி வெளிநாடு சார்ந்த தபால் தலைகளில் இடம் பெற்ற இந்திய பிரபலங்கள் பற்றி பார்ப்போம்:
மகாத்மா காந்தி

இந்தியா நீங்கலாக 150-க்கும் அதிகமான நாடுகளில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியாகியுள்ளது. பிரிட்டன், ஈரான், இத்தாலி, சிரியா, மொராக்கோ, அமெரிக்கா, உகாண்டா, மொரீஷியஸ் உட்பட பல நாடுகள் இவற்றில் அடக்கம்.
ரவீந்திர நாத் தாகூர்

இந்தியாவின் பிரபல கவிஞர் சுதந்திர போராட்ட வீரர். 14 நாடுகள் இவருடைய தபால் தலையை வெளியிட்டுள்ளன. இவற்றில் அர்ஜெண்டினா, பல்கேரியா, இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் அடக்கம், தாகூரின் 100-ஆவது பிறந்த நாள் அவருடைய அபிமானிகளால் கொண்டாடப்பட்ட போது, இந்திய தபால் இலாகா பல மதிப்புகளில் இவருடைய தபால் தலையை வெளியிட்டது.
அன்னை தெரஸா

50-க்கும் அதிகமான நாடுகள் அன்னை தெரஸாவின் தபால் தலையை வெளியிட்டுள்ளன. பிரேசில் ,பிரான்ஸ், வாட்டிகன் சிட்டி, மங்கோலியா உட்பட பல நாடுகள் இவற்றில் அடக்கம். இவை எல்லாவற்றிலுமே, அன்னை தெரஸாவை அவருடைய பாரம்பரிய உடையான , வெள்ளை வண்ண புடவையில், நீல கரையுடன் காணலாம்.
சுபின் மேத்தா
மேற்கத்திய இசையில் விற்பன்னர் மற்றும் கம்போசர். உலகம் முழுவதும் சுற்றி வந்து இவரும் சில நாட்டு தபால் தலைகளில் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரியா, மாலத்தீவு போன்றவை இதில் அடக்கம். பிரபலமான வியன்னா ஸ்டேட் ஒபாரா இவருடைய திறமையை அங்கீகரித்துத் தன்னுடைய அமைப்பில் உறுப்பினராக்கியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்

இவருடைய தபால் தலையை ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்டுள்ளன. 2013-இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டெண்டுல்கர், நிரந்தரமாக ஓய்வு பெற்ற பின் இந்திய தபால் இலாகா இவருடைய தபால் தலையை வெளியிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


