தமிழால் சிறப்புப் பெற்ற மாணவி!
"சிறப்பது என்றால் தமிழால் சிறக்க வேண்டும்' என்று கவி பாடிய புரட்சிக் கவி பாரதிதாசனின் 125ஆவது பிறந்த நாள் ஆண்டில், அவரது சொல்லுக்கேற்ப தமிழால் சிறப்புப் பெற்றவராகத் திகழ்கிறார் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்-ஜெயா தம்பதியின் மகள் செய்லா.










