/

தெரியுமா?

ஈரான் நாட்டில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் முறையில், "ஈரான்' எனும் பத்திரிகை "பார்சி' மொழியில் வெளியிடப்படுகிறது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

நெ . இராமகிருஷ்ணன்

ஈரான் நாட்டில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் முறையில், "ஈரான்' எனும் பத்திரிகை "பார்சி' மொழியில் வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திரிகையை பார்வையற்றவர்களே விநியோகம் செய்கின்றனர்.

தற்காலத்தில் வாகனங்களில் ஸ்டெப்னி எனப்படும் மாற்றுச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியின் அச்சு முறிந்துவிட்டால், அதற்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்காக "சேம அச்சு' கொண்டு செல்லப்பட்டதாக "புறநானூறு' 102-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

ராமாயணத்தை கம்பரும், மகாபாரதத்தை வில்லிப்புத்தூராரும் தமிழில் பாடியதை அறிவோம். அதோல், ஸ்ரீமத் பாகவத புராணத்தை தமிழில் வேம்பத்தூர் செவ்வை சூடுவார் இயற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.